நேர்மையான தேசத்தை நோக்கி எனும் நிகழ்ச்சித்திட்டத்தின கீழ் எமது பிரதேச செயலக பிரிவில் இலஞ்ச, ஊழல் அற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் விழிப்புணர்வு செயற்பாடுகள் 04.12.2023 தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஒரு கட்டமாக இன்று (05.12.2023) பொது மக்கள், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு இலஞ்சம், ஊழல் தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன் விழிப்புணர்வுப்பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டன....

உலக மண் தினத்தை முன்னிட்டு எழுதுமட்டுவாழ் தொடக்கம் ஆனையிறவு வரையிலான A - 9 வீதியின் இருமருங்கும் உக்காத கழிவுப் பொருட்களை அகற்றும் நிகழ்வானது இன்று (05.12.2023) நடைபெற்றது.
பிரதேச சபை செயலாளர் மற்றும் உதவிப்பிரதேச செயலாளர் ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர். இந் நிகழ்வில் தபாலகம், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பிரதேச சபை, பிரதேச செயலகம், மத்திய சுற்றாடல் அதிகார சபை என்பவற்றை சேர்ந்த உத்தியோகத்தர்கள், பொலிஸ், இராணுவத்தினர், வர்த்தக சங்கத்தினர், சமுர்த்தி சங்கங்கள் ஆகியன கலந்து கொண்டனர்.

சுகாதார அமைச்சின் சுதேச வைத்திய பிரிவினால் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் நடாத்தப்பட்ட "சுவதரணி" அறிவூட்டல் போட்டி நிகழ்வு இன்று (21.11.2023) கிளி /பளை மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
இதில் சுகதார அமைச்சின் சுதேச வைத்திய பிரிவின் அபிவிருத்தி பணிப்பாளர் திரு P. தயானந்தன், Dr சிவகுமார், பச்சிலைப்பள்ளி உதவிப்பிரதேச செயலாளர் ச.குணஜா, ஆயுள்வேத வைத்தியர் Dr அரவிந்தன், ஆசிரிய ஆலோசகர் ஞா.கலைச்செல்வி, கிளி/பளை மத்திய கல்லூரி, கிளி/கிளாலி றோமன் கத்தோலிக்க பாடசாலைகளின் அதிபர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எமது பிரதேச செயலக பிரிவின் சோரன்பற்று கிராம அலுவலர் பிரிவில் 29.11.2023 அன்று வள்ளலார் அருட்சோதி மன்றத்தின் பிரான்ஸ் கிளையினரின் ஏற்பாட்டில் 50 நலிவுற்ற குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கிவைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் அவர்கள் கலந்து கொண்டார்..

கிரிசலிஸ் நிறுவனத்தின் நிதிப்பங்களிப்பில் 250 பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு உதவிப்பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 21.11.2023 அன்று இடம்பெற்றது.

Scroll To Top