நீதி அமைச்சின் தேசிய ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தின் அனுசரணையுடன் இளைஞர் யுவதிகளுக்கான 100 மணித்தியால இரண்டாம் மொழி சிங்களப் பயிற்சிநெறி ஆரம்பநிகழ்வானது 08.11.2023 இன்று எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.ச.குணஜா தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில் வளவாளராக தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவன வளவாளரான திரு வே.தமிழ்ச்செல்வம் அவர்கள் கலந்து கொண்டார்.

எமது பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 12 கிராம அலுவலர் பிரிவில் உணவுப்பற்றாக்குறையை எதிர்கொள்ளும் 95 குடும்பங்களுக்கு சீன அரசினால் வழங்கப்பட்ட உலர் உணவுப்பொதிகள் 07.11.2023 அன்று வழங்கி வைக்கப்பட்டது.

சிறுவர் சபை அங்கத்தவர்களுக்கான முதலுதவிப்பயிற்சியானது பிரதேச செயலக மண்டபத்தில் 31.10.2023 அன்று நடைபெற்றது. இப்பயிற்சியினை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்திலிருந்து வருகை தந்த வளவாளர் பிரகாஷ் அவர்கள் வழங்கினார். அதில் 82 சிறுவர் சபை அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.

வேலை அனுபவமிக்க இளைஞர், யுவதிகளுக்கு முன் அனுபவத்திற்கான சான்றிதழ் (RPL) மூலம் NVQ சான்றிதழ் பெறுவதற்கு தகுதியுடையவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்வு உதவிப்பிரதேச செயலாளர் தலைமையில் இன்று (03.11.2023) எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் திரு க.கோடீஸ்வரன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரி, யாழ்ப்பாணம், திரு சி.சிவசொரூபன், கிளிநொச்சி மாவட்ட மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர், திரு செ.கிரிசாந் NAITA பரிசோதகர் மற்றும் எமது அலுவலக திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர், மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் நடாத்தப்படும் உற்பத்தித்திறன் போட்டியில் எமது அலுவலகம் தேசிய ரீதியில் 2ம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளது.கடந்த காலத்தில் நாம் அர்ப்பணிப்பாகவும் வினைத்திறனாகவும் சேவை வழங்கியதற்காக தேசிய ரீதியில் உற்பத்தித்திறன் விருதுகள் - 2020 போட்டித்தொடரில் 2ம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளோம். இது கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெறுபேறாகும்.இச் சந்தர்ப்பத்தில் நாம் அலுவலகத்தில் செய்த சிறிய சிறிய மாற்றங்களை ஏற்றுக்கொண்டு அதற்கு தங்களின் ஒத்துழைப்பை வழங்கிய பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Scroll To Top