2024ம் ஆண்டிற்கான புதுவருடத்தின் கடமை செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு பிரதேச செயலகத்தில் இன்று காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு பிரதேச செயலக முன்றலில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.தேசியக் கொடியேற்றப்பட்டதை தொடர்ந்து நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த அனைவரையும் நினைவு கூரும் முகமாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, உத்தியோகத்தர்கள் அனைவரும் புதிய ஆண்டிற்கான தமது கடமைகளைப் பொறுப்பேற்கும் வகையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
முதியோர்களுக்கான தேசிய செயலகத்தினால் 60 வயதிற்கு மேற்பட்ட 20 வறிய முதியோர்களுக்கு கட்டில் மெத்தை வழங்கப்பட்டது .
தேருநர் இடாப்பு மீளாய்வு தொடர்பாக கிராம அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கும் கலந்துரையாடலானது இன்று (22.12.2023) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் உதவித்தேர்தல் ஆணையாளர் கலந்து கொண்டு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்
26.12.2023 அன்று அனர்த்தங்களால் உயிரிழந்த உறவுகளை நினைவு கூரும் நிகழ்வு பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இதில் பிரதேச செயலாளர் அவர்கள் உரையாற்றும் போது அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்ததுடன் அனர்த்த குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் அவசியம் குறித்தும் கருத்துரை வழங்கினார்.மற்றும் ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலியும் செலுத்தப்பட்டது.
பசுந்துளிர் இதழ் - 08 நூல் வெளியீடும், கலைஞர் கௌரவிப்பு நிகழ்வும் இன்று (21.12.2023) பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு சிறப்புற நடைபெற்றது.இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சு.முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் மற்றும் கலாசாரப் பேரவையின் வெளியீடான பசுந்துளிர் இதழ் - 08 நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதன் ஆய்வுரையினை பச்சிலைப்பள்ளி பிரதேச சபை நூலகரும் கவிஞருமான வே. லவேந்திரா நிகழ்த்தினார்.














