


இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய இறுதிநிலைப் பரீட்சைக்கான கருத்தரங்கு மற்றும் அறநெறிப்பாடசாலைகளுக்கான பாடநூல்கள் வழங்கும் நிகழ்வும் 07.06.2025 கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் திறன்விருத்தி நிலையத்தில் இடம்பெற்றது. இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் திருமதி. K. ஹேமலோஜினி தலைமையில் சிறப்பாக நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு விரிவுரையாளரும் சைவப் புலவருமாகிய S. முகுந்தன் அவர்கள் வளவாளராக கலந்துகொண்டு விரிவுரையாற்றியிருந்தார். இந்நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலகப் பிரிவுக்குட்பட்ட அறநெறிப் பாடசாலைகளின் பொறுப்பாசிரியர்கள்,ஆசிரியர்களும் பங்குபற்றியிருந்தனர்.




ஐக்கிய நாடுகள் சபையினால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 5ம் திகதி உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. நடப்பாண்டுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்துக்கான கருப்பொருளாக Ending Plastic Pollution என்பதாகும். அந்தவகையில் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.






எமது பிரதேச செயலகத்தில் பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் அனுசரணையுடன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் இணைந்து நடாத்திய சட்ட ஆவணங்களான காலம் கடந்த பிறப்பு ,இறப்பு, விவாக பதிவுகளை மேற்கொள்ளல் மற்றும் முதியோர் அடையாள அட்டையினைப் பெற்றுக் கொள்ளல் போன்றவற்றிற்கான நடமாடும் சேவையானது பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேசசெயலர் தலமையில்காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை இன்றைய தினம் (05.06.2025) பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது இவ் நடமாடும் சேவையில் விருந்தினர்களாக திரு.ப. பிரபாகர் (பிரதிப்பதிவாளர் நாயகம் வடக்கு வலயம் யாழ்ப்பாணம் )திரு.ப சர்மிலன் (மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் கிளிநொச்சி ) திருமதி. த. வாசுகி (இணைப்பாளர் பெண்கள் வாழ்வுரிமை சங்கம் கிளிநொச்சி) , உதவி பிரதேச செயலாளர், பதிவாளர் திணைக்கள உத்தியோகத்தர்கள் , கிராம சேவை உத்தியோகத்தர்கள் , சமூக சேவை பிரிவு உத்தியோகத்தர்கள் ,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இவ் நிகழ்வானது மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட வகையில் சிறந்த சேவையை வழங்கியமை சிறப்பிற்குரியது இதில் 57 கோவைகளுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன குறித்த நிகழ்வில் வைத்து 14 பிறப்பு சான்றிதழும் இரண்டு இறப்பு சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டதுடன் ஒரு விவாகப் பதிவும் இடம் பெற்று விவாக சான்றிதழும், முதியோர் அடையாள அட்டைளும் வழங்கி வைக்கப்பட்டது .







































