சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் வருடாந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சர்வதேச புகைத்தல் மற்றும் போதை ஒழிப்பு கொடிவாரம் 2025 ஆம் ஆண்டிற்கான உண்டியல்கள் இன்றைய தினம் பிரதேச செயலாளரால் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00 மணியளவில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.





























