பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் கடந்த 20 வருடங்களாக HALO Trust நிறுவனத்தில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வானது இன்றைய தினம் HALO Trust நிறுவனத்தின் கட்டுப்பாட்டு மையமான முகமாலையில் நடைபெற்றது . இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக வடக்கு மாகாண ஆளுநர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், யாழ்ப்பான மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் HALO Trust நிறுவனத்தினர் மற்றும்...
பச்சிலைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட குடியிருப்பாளர்களின் பொதுவான பிரச்சனைகளை சபைக்கு சமூகமளிக்காமலேயே உடனடி நடவடிக்கைக்காக தெரிவிக்கும் வசதி கொண்ட செயலி ஒன்றினை பச்சிலைப்பள்ளி பிரதேசசபை பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
இச் செயலி தொடர்பாக பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு இன்று (26.02.2024) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர், பிரதேசசபை செயலாளர், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.