பால் மற்றும் பால்நிலை சமத்துவம் தொடர்பான செயற்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்ட உளநல சங்கம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
அவ்வாறான வேலைத்திட்டங்களில் தொடர்ச்சியாக கிராம மட்டத்தில் காணப்படுகின்ற கிராமிய அமைப்புக்களின் நிர்வாகப் பிரிவினருக்கு பால்நிலை சமத்துவம் தொடர்பான தெளிவுபடுத்தல்களை மேற்கொள்வதற்கு Gender sensitivity training for village leaders எனும் விழிப்புணர்வுக் கருத்தரங்கு இன்று(09.11.2023) காலை 10.00 தொடக்கம் மதியம் 1.30 வரை முல்லையடி கிராம அலுவலர் பிரிவில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் தம்பகாமம், தர்மக்கேணி, முல்லையடி, சோரன்பற்று, இயக்கச்சி, பிரிவுகளைச் சேர்ந்த கிராம மட்ட அமைப்புக்களைச் சேர்ந்த மக்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போன்றோர் பங்குபற்றினர். மேலும் இந் நிகழ்வில் எமது பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் மு.ரதிதேவி அவர்கள் கலந்து கொண்டார்.















