வேலை அனுபவமிக்க இளைஞர், யுவதிகளுக்கு முன் அனுபவத்திற்கான சான்றிதழ் (RPL) மூலம் NVQ சான்றிதழ் பெறுவதற்கு தகுதியுடையவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்வு உதவிப்பிரதேச செயலாளர் தலைமையில் இன்று (03.11.2023) எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் திரு க.கோடீஸ்வரன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரி, யாழ்ப்பாணம், திரு சி.சிவசொரூபன், கிளிநொச்சி மாவட்ட மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர், திரு செ.கிரிசாந் NAITA பரிசோதகர் மற்றும் எமது அலுவலக திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர், மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.















