இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வு எமது பிரதேச செயலகத்தில் 2024 பெப்ரவரி 04 ஆம் திகதி இன்று காலை 8.30 மணிக்கு தேசியக்கொடி ஏற்றலுடன் ஆரம்பமானது.
தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின்னர் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு உதவி பிரதேச செயலாளர் அவர்கள் சுதந்திர தின உரையை நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து "சுவதரனி மருத்துவச் செய்கை வாரம்" என்ற தொனிப்பொருளுக்கமைய எமது பிரதேச செயலக வளாகத்தில் மருத்துவ செடிகள் நடும் நிகழ்வும் சிரமதானமும் இடம்பெற்றது.















