டெங்கு பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு 09.01.2024 அன்று கிளாலி கிராம அலுவலர் பிரிவில் இடம்பெற்றது.டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையின் பொருட்டு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அலுவலர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்களுடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர், இராணுவம், பொலிஸார் என பலரும் சேர்ந்து அப்பிரதேசம் முழுவதும் வீடு விடாக சென்று டெங்கு தொடர்பான விழிப்புணர்வும் டெங்கு பரவும் இடங்கள் பற்றிய விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டது.














