பளை பிரதேச செயலத்திற்குட்பட்ட மக்களுக்கானசமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம் வழங்கும் நிகழ்வு இன்று காலை (2019.06.03) பிரதேச செயலாளர் ப. ஜெயராணி தலைமையில் பளை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. கல்விஇராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் பளை பிரதேசசபை தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் பங்குபற்றுதல்களுடன் மக்களுக்கான உரித்துப்படிவம் வழங்கிவைக்கப்பட்டது.
















