இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய இறுதிநிலைப் பரீட்சைக்கான கருத்தரங்கு மற்றும் அறநெறிப்பாடசாலைகளுக்கான பாடநூல்கள் வழங்கும் நிகழ்வும் 07.06.2025 கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் திறன்விருத்தி நிலையத்தில் இடம்பெற்றது. இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் திருமதி. K. ஹேமலோஜினி தலைமையில் சிறப்பாக நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு விரிவுரையாளரும் சைவப் புலவருமாகிய S. முகுந்தன் அவர்கள் வளவாளராக கலந்துகொண்டு விரிவுரையாற்றியிருந்தார். இந்நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலகப் பிரிவுக்குட்பட்ட அறநெறிப் பாடசாலைகளின் பொறுப்பாசிரியர்கள்,ஆசிரியர்களும் பங்குபற்றியிருந்தனர்.


















