வடமாகாண தொழிற்துறை திணைக்களமும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து நடாத்திய சௌபாக்கியா புதுவருட சந்தை பிரதேச செயலக முன்றலில் இன்றையதினம் (2019.04.10) பிரதேச செயலாளர் திருமதி ப.ஜெயராணி தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது. பொதுமக்களும் உற்பத்தியாளர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு இவ்வாறான ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை வாய்ப்புக்கள் ஊக்குவிப்பாக அமையும்.














